Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்படும் பிரிவினைவாத சக்திகள் குறித்து புதிய பாராளுமன்றம் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டுமென பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சர்வதேச சமூகத்தின் ஒரு தொகுதியினர் புலிகளுக்கு மீண்டும் உயிர்கொடுக்க முயற்சிப்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு சட்டமா அதிபர் திணைக்களம் அரசாங்கத்திற்கு கூடுதல் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சார்பானவர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் பிரச்சார நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதே அரசாங்கத்தின் பிரதான இலக்கு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரிவினைவாதத்தை தூண்டும் சகல சக்திகளையும் இல்லாதொழிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

அரசியல் மற்றும் ஏனைய விளைவுகளைக் கருத்திற் கொள்ளாது இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சகல தரப்பினருக்கு எதிராகவும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆளும் கூட்டணி கட்சியில் அங்கம் வகிக்கும் எந்தவொரு தரப்பினரும் பிரிவினைவாத கொள்கைகளை முன்னெடுக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த கால அரசாங்கங்கள் கடுமையான நடவடிக்கைளை எடுத்திருந்தால் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டம் முப்பது ஆண்டுகளுக்கு நீடித்திருக்காது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான சில புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் அரசாங்கத்திற்கு எதிரான பிரச்சாரங்களை முன்னெடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு வழிகளில் காணப்படும் பிரிவினைவாத சக்திகளை இல்லாதொழிக்க புதிய அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

0 Responses to பிரிவினைவாதிகளை இல்லாதொழிக்கப் போகிறாராம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com