“தமிழ் மக்களுக்கு சமஸ்டி அடிப்படையிலான தீர்வு ஒன்றை வழங்க இந்தியா விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனெனில், 13வது திருத்தச் சட்டம் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வாகாது” என்று தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
13வது திருத்தச் சட்டம் தமிழர்களின் அரசியல் எதிர்பார்ப்புகளுக்கு ஒரு தீர்வாகுமா? என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் சி.வி.விக்னேஸ்வரன், நேற்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “வடக்கு, கிழக்கு இணைப்பு உள்ளிட்ட காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்கினால் மாத்திரம் 13வது திருத்த சட்டம் எந்த அடிப்படையிலும் தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வாகாது.
ஒற்றையாட்சிக்குள் தெற்கில் இருக்கும் பெரும்பான்மை மக்களின் கைப்பொம்மையாக 13வது திருத்தச் சட்டம் மாற்றப்பட்டிருப்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். தமிழர்களின் நிலங்கள், மொழி, கலாச்சாரம், வாழ்வு முறை, பாரம்பரியம், மதத் தலங்கள் யாவும் பெரும்பான்மை மக்கள் ஒற்றையாட்சியின் கீழ் பெற்றுக் கொண்டுள்ள அதிகாரங்களால் இன்று பாதிக்கப்பட்டு வருகின்றன.
தமிழ் மக்கள் முன்னரைவிட மிக மோசமான அடக்கு முறைக்குள் அகப்பட்டுள்ளனர். இதனை இந்தியா உணர வேண்டும். இலங்கை தமிழர்களுக்கு இந்தியாவே பாதுகாப்பு அரண். 13வது அரசியலமைப்பு திருத்தம் என்பது ஒரு கையினால் சிறிதளவு அதிகாரத்தைக் கொடுத்து மறு கையினால் அதனை எடுத்துக்கொள்ளும் ஒரு சட்டக் கையாளுகை என்பதை நான் முதலமைச்சராக இருந்த போது உணர்ந்துள்ளேன்.
ஆகவே, நீண்டகால அடிப்படையில் இலங்கையில் தமிழ் மக்களின் நிலையான பாதுகாப்பையும் நல்வாழ்வையும் உறுதிப்படுத்தும் வகையிலும் இணைந்த வடக்கு- கிழக்கில் சமஸ்டி அடிப்படையிலான ஒரு தீர்வினை ஏற்படுத்துவதற்கு இந்தியா முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்.
முடிந்த ஜனாதிபதி தேர்தலில் வடக்கு- கிழக்கில் உள்ள ஒட்டுமொத்த தமிழ் பேசும் மக்களும் இனப்பிரச்சினைக்கான அதிகாரப் பகிர்வை கூட்டாக வலியுறுத்தியுள்ளமையை இலங்கை அதிகாரிகளும், இந்தியாவும் புரிந்துக்கொள்ள வேண்டும்.” என்றுள்ளது.
13வது திருத்தச் சட்டம் தமிழர்களின் அரசியல் எதிர்பார்ப்புகளுக்கு ஒரு தீர்வாகுமா? என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் சி.வி.விக்னேஸ்வரன், நேற்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “வடக்கு, கிழக்கு இணைப்பு உள்ளிட்ட காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்கினால் மாத்திரம் 13வது திருத்த சட்டம் எந்த அடிப்படையிலும் தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வாகாது.
ஒற்றையாட்சிக்குள் தெற்கில் இருக்கும் பெரும்பான்மை மக்களின் கைப்பொம்மையாக 13வது திருத்தச் சட்டம் மாற்றப்பட்டிருப்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். தமிழர்களின் நிலங்கள், மொழி, கலாச்சாரம், வாழ்வு முறை, பாரம்பரியம், மதத் தலங்கள் யாவும் பெரும்பான்மை மக்கள் ஒற்றையாட்சியின் கீழ் பெற்றுக் கொண்டுள்ள அதிகாரங்களால் இன்று பாதிக்கப்பட்டு வருகின்றன.
தமிழ் மக்கள் முன்னரைவிட மிக மோசமான அடக்கு முறைக்குள் அகப்பட்டுள்ளனர். இதனை இந்தியா உணர வேண்டும். இலங்கை தமிழர்களுக்கு இந்தியாவே பாதுகாப்பு அரண். 13வது அரசியலமைப்பு திருத்தம் என்பது ஒரு கையினால் சிறிதளவு அதிகாரத்தைக் கொடுத்து மறு கையினால் அதனை எடுத்துக்கொள்ளும் ஒரு சட்டக் கையாளுகை என்பதை நான் முதலமைச்சராக இருந்த போது உணர்ந்துள்ளேன்.
ஆகவே, நீண்டகால அடிப்படையில் இலங்கையில் தமிழ் மக்களின் நிலையான பாதுகாப்பையும் நல்வாழ்வையும் உறுதிப்படுத்தும் வகையிலும் இணைந்த வடக்கு- கிழக்கில் சமஸ்டி அடிப்படையிலான ஒரு தீர்வினை ஏற்படுத்துவதற்கு இந்தியா முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்.
முடிந்த ஜனாதிபதி தேர்தலில் வடக்கு- கிழக்கில் உள்ள ஒட்டுமொத்த தமிழ் பேசும் மக்களும் இனப்பிரச்சினைக்கான அதிகாரப் பகிர்வை கூட்டாக வலியுறுத்தியுள்ளமையை இலங்கை அதிகாரிகளும், இந்தியாவும் புரிந்துக்கொள்ள வேண்டும்.” என்றுள்ளது.
0 Responses to தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு 13வது திருத்தச் சட்டம் தீர்வாகாது: சி.வி.வி