Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்தியத்திரைப்படத்தின் நட்சத்திரங்களில் ஒன்றாக விளங்கும் அசின் அண்மையில் மகிந்தவின் துணைவியுடன் தமிழர் தாயகத்தின் வடபகுதிக்கான பயணம் ஒன்றினை மேற்கொண்டுள்ளதுடன், அவரின் பயணம் ஊடாக தமிழ் ஊடகங்களையும், தமிழ் மக்களையும் திசைதிருப்பும் நடவடிக்கையில் ஸ்ரீலங்காப்படையின் புலனாய்வாளர்கள் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

ஸ்ரீலங்கா, கொழும்பில் நடைபெற்ற இந்தியாவின் பன்நாட்டு திரைப்படவிழாவினை புறக்கணித்த இந்திய திரையுலக கலைஞர்கள் பன்நாட்டு தமிழ் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், அசினின் ஸ்ரீலங்காவிற்கான பயணமானது புலனாய்வுரீதியாக நடத்தப்பட்ட நாடகமாக வெளிவந்துள்ளது.

இன்று இந்திய திரையுலக கலைஞர்களின் திரைப்படங்களை வெற்றிபெற செய்வதில் பன்நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் கைகளில்தான் தங்கியுள்ளது. படங்களின் வெளியீடுகள் தொடர்பாக பன்நாடுகளில் வாழும் தமிழ் மக்கள்தான் கதாநாயகன் நாயகிகளின் வெற்றியினை தீர்மானித்துக் கொள்கின்றார்கள் என்பதை நடந்துமுடிந்த "ஐப்பா" திரைப்பட நிகழ்வு காட்டிநிற்கின்றது. குறிப்பாக ஈழத்தமிழர்களின் கைகளில்தான் என்பதை நன்கு வெளிக்காட்டியும் நிற்கின்றது.

தமிழக திரையுலகத்தின் செயற்பாடுகளை மீறி அசின் சிங்கள தேசத்திற்கு சென்றுள்ளதும், தமிழ் மக்களை சந்தித்துள்ளதுமானது தென்னிந்திய திரைப்படதுறையினரின் முகம் மீது கரிபூசும் செயற்பாடாக அமைந்துள்ளது. பன்நாட்டு திரைப்பட விழாவினை புறக்கணித்த இந்திய தமிழக திரையுலகம் அதனையும் மீறி கொழும்பிற்கு செல்லும் நடிகர்களின் திரைப்படங்கள் தமிழகத்தில் தடைவிதிக்கப்படும் என்றும் எடுத்துகூறியுள்ளார்கள்.

இது இவ்வாறிருக்க அசினின் பயணத்தின் பின்னணியினை சிரந்தி ராஜபக்ச தனது சிங்கள கலைஞர்களை கொண்டு கையாண்டவிதமும் இதில் ஸ்ரீலங்காப்படையின் புலனாய்வாளர்களின் செயற்பாடும் வியக்கத்தக்கது.

ஸ்ரீலங்காவின் சிங்கள ஆட்சியாளர்கள் குறிப்பாக மகிந்தராஜபக்சவின் உடன்பிறப்புக்கள் பிள்ளைகள், துணைவி உட்பட அனைவரும் தமிழக தமிழ் திரையுலகத்திற்கு சவால்விடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.

அசின் கொழும்பில் நிற்கும் போதுதான் முப்பது கிலோமீற்றர் தூரத்தில் உள்ள தமிழகத்தின் கடற்தொழிலாளர்கள் ஸ்ரீலங்கா கடற்படையினரால் தாக்கப்பட்டும் சுட்டு படுகொலை செய்யப்பட்ட நிகழ்வுகளும் நடந்தேறியுள்ளன. இன்நிலையிலும் அசினின் யாழ்ப்பண பயணம் சிரந்தி ராஜபக்சவுடன் மேற்கொள்ளப்பட்ட சில உடன்பாடுகளின் அடிப்படையில் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கில் தமிழ் மக்களின் கலாச்சார சீர்கேட்டினை ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் சிங்கள இனத்தவர்களால் தற்போது கலப்புத்திருமணங்கள் நடைபெறதொடங்கியுள்ளன. அதாவது சிங்கள இனத்தவர்களின் பெண்கள், ஆண்கள் தமிழ் இளைஞர், யுவதிகளை திருமணம் செய்துகொள்ளும் நோக்கில் ஸ்ரீலங்கா அரசின் இனக்கலப்பு நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இதற்காக கலாச்சாரத்தையும் கலைபண்பாட்டையும்தான் தற்போது கையில் எடுத்திருக்கின்றார்கள்.

சிங்கள யுவதிகள் அரைகுறை ஆடைகளுடன் தமிழர் தாயத்தில் கால்பதித்துள்ள அதேவேளை சிங்கள திரைப்படத் துறையினதும் காலுன்றியுள்ளார்கள். இன்நிலையில்தான் வடக்கின் யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் இளைஞர்களை சிங்களம் வலைக்குள் வீழ்த்தும் நோக்கில் தென்னிலங்கை சிங்கள விபச்சார பெண்கள் யாழ்ப்பாணத்திற்கு படையெடுத்துள்ளார்கள். இவர்கள் ஊடாக தமிழ் இளைஞர்களின் கலாச்சாரம் சீரழிக்கப்படவுள்ளது.

அதேவேளை தமிழ் மக்களின் பகுதிகளில் உள்ள இளம் பெண்களை கடத்தியும், காதலிப்பதாகவும் கூறி தென்னிலங்கையில் விபச்சாரம் செய்யும் நடவடிக்கையில் ஸ்ரீலங்காப்படையினரும் சிங்கள இளைஞர்களும் ஈடுபட்டுள்ளமையும் இதற்கு சிங்கள அமைச்சர்கள் துணைபோகின்றமையும கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வாறான ஒர் நிகழ்வு அண்மையில் நடைபெற்றுள்ளது. அதாவது கிளிநொச்சியில் பதினாறு அகவையுடைய இளம் பெண்ஒருவரை ஸ்ரீலங்காப்படையினர் காதலித்து தென்னிலங்கைக்கு கடத்திச்சென்று அங்கு காவல்துறையினரால் பிடிக்கப்பட்ட நிகழ்வும் நடந்தேறியுள்ளது.

இன்நிலையில்தான் கலைபண்பாடுகளை காட்டி, திரைப்பட நடிகர்களை காட்டி, தமிழ் மக்களை மோசம் செய்யும் நடவடிக்கையில் சிரந்தி ராஜபக்ச இறங்கியுள்ளார். இவ்வாறு ஸ்ரீலங்கா அரசிற்கும் சிங்கள இனத்தவர்களுக்கும் துணைபோய்கொண்டிருக்கும் தென்னிந்திய திரைப்பட நடிகர்களின் படங்களை பன்நாடுகளில் உள்ள தமிழ் மக்கள் புறக்கணித்து அவர்களுக்கான தகுந்த பாடத்தை புகட்டவேண்டும்.

0 Responses to தமிழ்க்கலாச்சரா சீர்கேட்டிற்கு வழிவகுக்கும் அசினின் வடபகுதிக்கான பயணம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com