Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஈழத்தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் ஆதரவாகப் போராடுபவர்களை மிரட்டி ஒடுக்குவதற்காக சீமான் பழிவாங்கப்பட்டிருக்கிறார் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.

வேலூர் சிறையில் வைக்கப்பட்டிருந்த சீமான் கடந்த வெள்ளிக்கிழமை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மீண்டும் கைது செய்யப்பட்டார். இவரது சிறைத்தண்டனை ஒரு வருடத்துக்கு நீடிக்கப்பட்டது.

இதுகுறித்து பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

"நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டிருப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். ஈழத் தமிழர்களுக்காகவும் தமிழக மீனவர்களுக்காகவும் குரல் கொடுத்தமைக்காக அவரை மிகக்கொடுமையான சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்திருப்பது அப்பட்டமான ஜனநாயக விரோதப் போக்காகும்.

ஈழத்தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் ஆதரவாகப் போராடுபவர்களை மிரட்டி ஒடுக்குவதற்காக சீமான் பழிவாங்கப்பட்டிருக்கிறார். கருணாநிதியின் இந்தக் கனவு ஒருபோதும் பலிக்கப்போவதில்லை.

எத்தனை அடக்குமுறைகள் ஏவப்பட்டாலும் ஈழத்தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் ஆதரவான போராட்டங்கள் தொடரும். நிலைமை முற்றுவதற்குள் சீமானை விடுதலை செய்யும்படி வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

0 Responses to சீமான் பழிவாங்கப்படுகின்றார்: பழ. நெடுமாறன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com