Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகில் உள்ள பந்தநல்லூரில் நாம் தமிழர் கட்சிவருகிற 27-10-2010 (புதன்) அன்று மாலை 5.30 மணிக்கு பந்தநல்லூர்கடைவீதியில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடத்த இருக்கிறது. இந்தப்பொதுக்கூட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர். வினோபா என்றவீரக்குமரன் தலைமை வகிக்கிறார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்சதா.முத்துகிருஷ்ணன், வழக்கறிஞர் தஞ்சை கருணாநிதி ஆகியோர் முன்னிலைவகிக்கின்றனர்.

கூட்டத்தில் திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தென்றல்சந்திரசேகர், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் வழக்கறிஞர் மணி.செந்தில்,வழக்கறிஞர்..நல்லதுரை ,தலைமை பொறுப்பாளர்களில் ஒருவரானதமிழ்முழக்கம்.சாகுல் அமீது ஆகியோர் சிறப்புரை ஆற்ற உள்ளனர். மாணவரணிபொறுப்பாளர் முகமது இர்சாத் வரவேற்புரை ஆற்ற பந்தநல்லூர் கண்ணன் நன்றிநவில்கிறார். திருவிடைமருதூர் ஒன்றியத்தில் நாம் தமிழர் கட்சிகூட்டங்களுக்கு மட்டும் அனுமதி கொடுக்காமல் இருந்த காவல்துறை ,கும்பகோணம் நாம் தமிழர் கட்சியின் சார்பாக மதுரை உயர்நீதிமன்றத்தில்வழக்கு தொடுத்த பிறகு அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. பல தடைகளைதாண்டி நடைபெறும் இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை கும்பகோணம் நாம் தமிழர்கட்சியினரும், பந்தநல்லூர் நாம் தமிழர் கட்சி கிளையினரும் வெகுபிரம்மாண்டமான முறையில் செய்து வருகின்றனர்.

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to கும்பகோணம் அருகில் பந்தநல்லூரில் நாம் தமிழர் கட்சி சார்பாக கட்சியின் கண்டன பொதுக்கூட்டம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com