இதற்கு மேலதிகமாக, நோர்வே, பிரிட்டன், அவுஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இயங்கிவரும் புலி ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கான மின் அஞ்சல் முறைப்பாடுகளை அனுப்பி வைத்துள்ளதாகக் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, உரிய காலத்திற்குள் அனுப்பி வைக்கப்படாத ஆவணங்களை ஐ.நா.நிபுணர் குழு திருப்பி அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலையில் இலங்கை அரசாங்கமும், படையினரும் போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஆவணங்கள் போலியானவை என திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலி ஆதரவு அமைப்புக்களும், அரச சார்பற்ற நிறுவனங்களும் இவ்வாறான போலியான ஆவணங்களை அனுப்பி வைத்துள்ளதாகவும், கடந்த காலங்களில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வழங்கிய அரச சார்பற்ற நிறுவனங்களே இவ்வாறு போலியான தகவல்களை வழங்கியுள்ளதாகவும் திவயின செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.



0 Responses to 1100 போர்க்குற்ற முறைப்பாடுகள் ஐ.நாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன