மேலும் அவர் தெரிவிக்கையில்:
இன்றுவரை இலங்கையில் அமைக்கப்பட்ட எந்த ஆணைக்குழுவும் எதுவித தீர்வையும் தராத நிலையில் வெறும் கண்துடைப்புக்காக ஏற்படுத்தப்பட்ட கற்றறிந்த பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக் குழுவானது அதிகாரமற்ற ஓர் ஆணைக்குழுவாக செயற்பட்டு வருகின்றது.
அதுபோலவே ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்த நிபுணர் குழுவும் காணப்படுகிறது. குறைந்தபட்சம் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் விபரங்களையாவது இவர்களால் இதுவரை வெளியிட முடியவில்லை.
எனவேதான் போரினால் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கோ அல்லது படுகொலை செய்யப்பட்டோரின் உறவினர்களுக்கோ இன்றுவரை எந்தத்தீர்வும் கிடைக்கவில்லை. இனியும் கிடைக்கப் போவதில்லை என தெரிவித்தார்.



0 Responses to ஐ.நா. நிபுணர் குழு வருகையால் தமிழருக்கு பயன் எதுவுமில்லை: சிவாஜிலிங்கம்