Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தேசத்தின் குரல் அண்ணன் நினைவாக...

பதிந்தவர்: தம்பியன் 17 December 2010

கடுநோய் கொண்டும் காற்றாய்ப் பறந்து
கனலாய் தெறிக்கும் விதமாய் பேசி
இடுமோர் வெற்றிக்கிணையே இல்லை
எதிரிக்கிவரோ பெருமோர் தொல்லை

எதானால் இவரை அழைத்தாய் எங்கள்
இறைவாஉனக்கேன் இரக்கம் இல்லை
பதமாய் பொங்கிப் படைக்கும்வேளை
பானைஉடைத்தாய் பார்த்துக்கெடுத்தாய்

மனதில் உரமும் செழிக்கும்வேளை
மரணம்தந்தே மயங்கச்செய்தாய்
கனவில்மட்டும் நிம்மதி என்று
காலமெல்லாம் கலங்கச் செய்தாய்

உரையைக்கேட்க இதயம் மகிழும்
உண்மைப் பேச்சில் உணர்வும் கசியும்
வரமாய் தமிழர்க் கொளியாய் வைத்து
வழியில் செல்ல இருளைத் தந்தாய்

இருந்தால் எங்கள் ஈழம் வெல்லும்
என்றா இவரை கொண்டாய் சதியை
பெரிதாய்போட்டே பிரிவைச்செய்தாய்
பிழையை செய்தாய் பேசற்கரிய

தமிழாம் ஈழத்தலைவர் எல்லாம்
தரணிகின்றிச் செய்தாய் எங்கள்
அமிழ்தாம் தேசக்குரலின் தலைவன்
அழியா தெங்கள் நினவில் நிலைப்பார்

வருமாம் ஈழம் வந்தேதீரும்
வழியும் தோன்றும், வளரும் ஜோதி
பெருமா ஒளியாய் விரியும், ஈழம்
பிறந்தோர் நாளில் பெருமைகொள்ளும்

உயிரில் உணர்வில் ஊறிக்கொண்டார்
உலகில் எவரும் பாசத்தோடு
அருகில் சென்று அன்பாய் பேசும்
அண்ணன் தேசக்குரலோன் எங்கள்

தமிழீழத்தின் கொள்கைதன்னை
தாயகம் தேசியம் தன்னாட்சி யென்
றழகாய் வகுத்து அளித்தார் அவரை
அகிலம் உள்ளோர் வரையும் மறவோம்

கிரிஷாசன்.

0 Responses to தேசத்தின் குரல் அண்ணன் நினைவாக...

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com