அந்த திரைப்பட விழாவை நடத்துகிற அமைப்போ, மனச்சாட்சியே இல்லாமல், அமிதாபை அந்த விழாவின் சிறப்புத் தூதுவர் பொறுப்பிலிருந்து நீக்குவதாக அறிவித்துள்ளது.
இதைப் பற்றியெல்லாம் பொருட்படுத்தாமல் தமிழரின் உணர்வுகளை மதித்த அமிதாபுக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில், ஆயிரக்கணக்கான நன்றி கூறும் தந்திகளை நாம் தமிழர் கட்சி இளைஞர்கள் 27.1.11 வியாழக்கிழமை கொடுக்க உள்ளனர்.
முதல் தந்தியை, சென்னை அண்ணாசாலை தலைமை அஞ்சலகத்தில் இருந்து காலை 10 மணிக்கு சீமான் கொடுக்க இருக்கிறார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
செய்தித் தொடர்பாளர்
நாம் தமிழர் கட்சி.



0 Responses to அமிதாபுக்கு நாம் தமிழர் கட்சியினர் தந்தி