நேற்று முன் தினம் நீர்கொழும்பில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றுகையிலேயே ரணில் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
கே.பி மீதான பல குற்றச்சாட்டுகளைக் கண்டும் காணாதது போல இருந்து கொண்டு தம்மீது மட்டும் அரசாங்கம் குற்றம் சுமத்துவதாகக் கூறியுள்ள ரணில், எதிர்க்கட்சி உறுப்பினர்களைத் தேவையில்லாமல் துரோகிகள் எனப் பட்டம் குத்தும் அரசாங்கம் கே.பி க்கு மட்டும் அதிகபட்ச பாதுகாப்பையும் வசதிகளையும் செய்து வருகிறது எனவும் குறிப்பிட்டார்.
கே.பி இலங்கை அரசுக்கு எதிராகச் செயற்பட்டார், அவற்றுக்கெல்லாம் அவர் நிச்சயம் பதில் கூறியே ஆகவேண்டும் என்று கூறும் ரணில், தற்போதைய அரசாங்கத்தின் மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள கசப்புணர்வு மற்றும் பொருளாதார ரீதியில் மக்களுக்கு ஏற்பட்டுள்ள சுமை மற்றும் வாழ்க்கைச் செலவைக் குறைக்க நடவடிக்கை எடுக்க முடியாமல் அரசின் திண்டாட்டம் ஆகியவை வரப்போகும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் ஆளும் கட்சிக்குத் தோல்வியைச் சம்பாதித்துக் கொடுக்கும் எனவும் சொல்லியுள்ளார்.



0 Responses to உடனடியாக கே.பி ஐ இந்தியாவிடம் கையளியுங்கள்: ரணில்