தமிழ்நாட்டிலுள்ள அரசியல் தலைவர்களுக்கு விடுதலைப் புலிகளால் அச்சுறுத்தல் என்ற எச்சரிக்கை அண்மையில் விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் லத்திகா சரண் இதைத் தெரிவித்தார். எனினும், வரப்போகும் தேர்தல் காலத்தில் அரசியல் தலைவர்களுக்கு போதிய பாதுகாப்பு வசதிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
ஒவ்வொரு மாவட்டத்திலுமுள்ள சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்த அறிக்கையைத் தமக்குச் சமர்ப்பிக்குமாறு தாம் போலீசைக் கேட்டுள்ளதாகவும், இவ்வறிக்கையில் தேர்தல் காலத்தில் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் மற்றும் இப்பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு அவசியமானவை எவை என்பன குறித்தும் குறிப்பிடுமாறு அவர் கேட்டுள்ளாராம்.



0 Responses to தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகளே இல்லை: பிரதிப் போலீஸ் மா அதிபர் லத்திகா சரன்