பிரித்தானிய சட்டம் மீண்டும் இங்கு அமுல்படுத்தப்படுவதற்கு இடமளிக்க முடியாது என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று சபையில் தெரிவித்தார். ஊடகங்கள் மீதும் அமைதி வழி ஆர்ப்பாட்டங்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. ஆனால் குற்றவாளிகள் கைது செய்யப்படுவதும் இல்லை. பொலிஸார் விசாரணைகளை நடத்துவதில்லை. இத்தகைய செயற்பாடானது நாட்டில் சர்வாதிகார ஆட்சியே இடம்பெறுகின்றது என்பதை உணர்ந்து நிற்கின்றது என்றும் அவர் கூறினார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அவசரகாலச் சட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.



0 Responses to பிரித்தானியாவின் ராணுவ சட்டத்தின் கீழேயே பொன்சேகாவுக்குத் தண்டனை