அவன் ஆசைப்பட்டதெல்லாம் லட்சக்கணக்கான தமிழீழ மக்களை, தமிழ்நாடு மக்கள் காப்பாற்ற வேண்டும் என்றுதான், தன்னுயிரை தானே நெருப்புக்கு இரையாக்கிக் கொண்டான்.
முத்துக்குமார் ஒன்றும் கோழையில்லை. அவன் தற்கொலை செய்வதற்கோ, தீக்குளிப்பதற்கோ அவன் மனநோயாளி அல்ல. அவன் 32 பக்கத்திற்கு தமிழ்நாட்டிற்கு, உலக மக்களுக்கு, அய்.நா. மன்றத்திற்கு, இங்குள்ள காவல் துறைக்கு, மருத்துவர்களுக்கு, மாணவர்களுக்கு என ஒவ்வொருவருக்குமான செய்திகளை பதிவு செய்து, அந்த ஆவணத்தை மக்களிடம் அளித்துவிட்டு தீக்கிரையாக்கிக் கொண்டான் என்று சொன்னால், அவன் எவ்வளவு மன உறுதி படைத்தவனாக இருந்திருப்பான். அவன் எவ்வளவு வேதனைப்பட்டிருந்தால் வேறு யாரும் தமிழ்நாட்டிலே, தமிழ்நாட்டு மக்கள், இந்திய அரசை தட்டிக் கேட்கவில்லை. இந்திய அரசை தடுத்து நிறுத்தவில்லையே, தமிழ்நாட்டு மக்கள் முன் வரவில்லையே என்ற ஆதங்கத்திலேதான் முத்துக்குமார் தன் உயிரை தீக்கிரையாக்கிக் கொண்டான்.
தமிழ்நாட்டில் நாம் அத்தனை பேரும் திரண்டு போயிருந்தால் அனைத்து அரசியல் கட்சிகளும், தமிழ் உணர்வு இயக்கங்களும் ஒன்றுபட்டு 2009 பிப்ரவரி மாதத்திற்கு முன்னர் குறைந்தது 10000 பேர் தெருவில் நின்றிருந்தால் முத்துக்குமார் இறந்திருக்க மாட்டார். நம்மோடு போர்க்களத்தில் நின்றிருப்பான். யாரும் போராடவில்லையே! எல்லோரும் பதிவு செய்வதோடு அடையாளப்படுத்துவதோடு நிறுத்திக் கொண்டார்களே, முதலமைச்சர் கடிதம் எழுதுகிறார் என்று சொன்னால் மற்ற தலைவர்கள் அறிக்கை விடுவதோடு நிறுத்திக் கொள்கிறார்கள் என்ற வேதனையில் தான் தன் சாவுக்கு பின்னாலாவது இந்த செய்தியை தாங்கிக் கொண்டு தமிழ்நாட்டு மக்கள் ஒன்றாக திரள மாட்டார்களா, தெருவுக்கு வந்து போராட மாட்டார்களா என்று தன்னை அழித்துக் கொண்டான்.
கோவை கு.இராமகிருட்டிணன், பொதுச்செயலாளர், பெரியார் திராவிடர் கழகம்



0 Responses to தியாகச்சுடர் முத்துக்குமார் மரணத்துக்கு நியாயம் வழங்காத தமிழகம்