Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட போரில் கொல்லப்பட்ட பல ஆயிரம் தமிழ் மக்கள் நினைவாக ஐ.நாவுக்கு முன்பாக தமிழ் மக்களால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பல ஆயிரம் மக்கள் கலந்துகொண்டபோதும், இரண்டு மில்லியன் ரூபாய்கள் செலவில் அமெரிக்கா சென்ற சிறீலங்கா அரசின் அமைச்சர் விமல் வீரவன்சாவினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் 20 பேரே கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

நியூயோர்க்கில் உள்ள ஐ.நா அலுவலகத்தில் சிறீலங்கா அரசு பௌத்த ஜெயந்தி விழாவை அண்மையில் கொண்டாடியிருந்தது. அதேசயம், தமிழ் மக்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தையும் அது ஏற்பாடு செய்திருந்தது.

இந்த விழாவில் கலந்துகொள்வதற்கு சென்ற சிறீலங்கா அரசின் அமைச்சர் விமல் வீரவன்சா இரண்டு மில்லியன் ரூபாய்களை செலவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விமலும், அவரின் இளைய மகன் விபுத்தியும் எமிரேட்ஸ் விமானத்தின் முதல் தர இருக்கையில் பயணம் செய்துள்ளனர்.

சிறீலங்கா அரசின் போரில் கொல்லப்பட்ட பல ஆயிரம் தமிழ் மக்கள் நினைவாக ஐ.நாவுக்கு முன்பாக தமிழ் மக்களால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பல ஆயிரம் மக்கள் கலந்துகொண்டபோதும், சிறீலங்கா அரசின் அமைச்சர் விமல் வீரவன்சாவினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் 20 பேரே கலந்து கொண்டிருந்தனர்.

அவர்களில் ஐந்து பேர் பாலித கோகன்னா மற்றும் சவீந்திர டி சில்வா ஆகியோரின் மெய்பாதுகாவலர்கள். ஏனைய ஐந்து பேர் நியூயோர்க்கில் உள்ள சிறீலங்கா தூதரகத்தில் பணியாற்றும் பணியாளர்கள்.

கூட்டத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த வீரவன்சா, தனது அதிர்ச்சியை வெளியில் காண்பிக்காது, சில கோசங்களை சிறீலங்கா அரசின் றூபவாகினி தொலைக்காட்சியின் ஒளிப்படக் கருவி முன் முழங்கிவிட்டு, தனது மகனுடன் நயாகரா நீர் வீழ்ச்சியை பார்க்கச் சென்றுவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

0 Responses to பயணச் செலவு இரண்டு மில்லியன் – ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் இருபது பேர்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com