Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முதலாம் திகதி மே மாதம் டென்மார்க் நாட்டில் இருந்து ஆரம்பம் ஆகிய மிதிவண்டிப்பயணம் இன்று பதினைந்து நாட்களை கடந்து Holland நாட்டின் நகரங்கள் ஊடாக செல்லுகின்றது.

திரு பார்த்தீபன் தம்பிராசா, திரு மனோகரன் மனோரஞ்சிதன் ஆகியோர் தமது நீதி தேடி செல்லும் பாதையில் கடந்த நாட்களாக யேர்மனியில் மற்றும் Holland நகரங்களில் பல பிரச்சார நிகழ்வுகளுடன் பல்லினமக்களையும், தமிழ்மக்களையும் சந்தித்து சென்றனர்.

சிறப்பாக இவர்களின் மிதிவண்டிப்பயணம் பற்றிய செய்திகள் பல யேர்மனிய ஊடகங்களில் பிரசுரிக்கப்பட்டது.

இன்று இவர்களின் பயணம் Hilversum எனும் நகரில் இருந்து Amsterdam நோக்கி செல்ல இருக்கின்றது.

இவர்களின் பயணம் இறுதியாக 18.05.2011 போர்குற்றவியல் நாள் அன்று அனைத்துலக போர்க்குற்றவியல் நீதிமன்றத்தின் முன்றலில் வந்தடையும் .கடந்த ஆண்டு டென்மார்க் தமிழர் பேரவையால் போர்க்குற்றத்தில் நேரடியாக ஈடுபட்ட அத்தோடு பங்கெடுத்த அதன் பின்னர் வெளிநாடுகளுக்கு தூதுவர்களாக அனுப்பி வைக்கப்பட்டிருக்கும் இராணுவத்தளபதிகளுக்கு எதிரான வழக்கு பதிவு சம்மந்தமாக அவர்களின் சட்டத்தரணி ஊடாக அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு அனுப்பப்பட்ட கோரிக்கைகளுக்கு, பல தடவை கடிதங்கள் ஊடாக கேட்ட பின்னரும், இன்றுவரை எவ்வித மறுமொழியும் கிடைக்காத படியால், இம் முறை அதை வலியுறுத்தும் முகமாக திரு பார்த்தீபன் தம்பிராசா, திரு மனோகரன் மனோரஞ்சிதன் ஆகியோர் நீதி கேட்டு டென்மார்க்கில் இருந்து அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் நோக்கி மிதிவண்டிப்பயணத்தை ஆரம்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களை தொடர்புகொள்வதற்கு பின்வரும் தகவல்களை இங்கே குறிப்பிடுகிறோம் நேரடித் தொடர்பு: 0031 684 72 80 21

வலைத்திரையில்

மின்னஞ்சலில் மற்றும் முகப்புத்தகத்தில் உங்கள் வாழ்த்து செய்திகளை அனுப்புவதற்கு : forum@dansktamilskforum.dk

Facebook : 1000 km for retfærdighed - War Crimes Day


நன்றி

யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை

0 Responses to நீதி தேடி சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை நோக்கி செல்லும் மிதிவண்டிப்பயணம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com