Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தென் சூடானிய அரசாங்கத்துக்கும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கும் இடையிலான உயர்மட்ட சந்திப்பொன்று ஜெனீவாவில் இடம்பெற்றுள்ளது.

இருதரப்பு நல்லுறவுகளை கட்டியெழுப்பும் நோக்கில் இடம்பெற்றுள்ள இச்சந்திப்பு குறித்து, நா.த.அரசாங்கத்தின் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நாடு கடந்த​ தமிழீழ​ அரசாங்கத்தின் பிரதி வெளிவிவகார​ அமைச்சர் மாணிக்கவாசகர .கனகரட்னம், ஜ​.நாவுக்கான​ பிரதிநிதி முருகையா சுகிந்தன் ஆகிய பிரதிநிதிகளுக்கும், ஜரோப்பிய​ ஒன்றியத்திற்கான ​ தென்சூடானிய உயர் ஸ்தானிகர் பிரான்ஸிஸ் நஷாரியோ அவர்களுக்கும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

தென்சூடானினதும், தமிழீழ​ மக்களினதும் இருபக்க​ நலன்கள் குறித்த​ பல்வேறு வகையான​ விடயங்களுடன், மனித​ உரிமைகள் மற்றும் தென்சூடானில் அபிவிருத்தி திட்டங்கள் பற்றியதாகவும் இச்சந்திப்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

எதிர்காலத்தில் இரு அரசாங்களிடையிலான இராஜதந்திர​ உறவுகளை வலுப்படுத்தி கொள்ளவும், தென்சூடானுடனும், சர்வதேசத்துடனும் நல்லுறவுகளை கட்டியெழுப்புவதற்கான​ சாத்தியப்பாடுகள் குறித்தும் இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டன.

இவ்வாறு நா.த.அரசாங்கத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to தென் சூடான் - தமிழீழ அரசாங்கம் உயர்மட்டச் சந்திப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com