Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையில் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் சம்பவங்கள் தொடர்பாக நம்பகத்தன்மையுடன் கூடிய தேசிய பொறுப்புடைமை நடவடிக்கை ஒன்றை முன்னெடுக்க வேண்டியது அவசியம் என ஐக்கிய நாடுகளின் செயலாளர் பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளார்.

நியுயோர்க்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள மஹிந்த ராஜபக்சவை நேற்று சந்தித்தபோதே பான் கீ மூன் இந்த விடயத்தை வலியுறுத்தியதாக ஐக்கிய நாடுகளின் செய்தி சேவை அறிவித்துள்ளது.

மோதல் ஏற்படுவதற்கான காரணங்கள் குறித்து கவனம் செலுத்தி அரசியல் தீர்வொன்றை காணவேண்டியதன் முக்கியத்துவத்தையும் ஐ.நா. செயலாளர் நாயகம் சுட்டிக்காட்டியதாக அவரது பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to போர் குற்றம் தொடர்பில் பொறுப்புடைமை நடவடிக்கை வேண்டும்: பான் கீ மூன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com