Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அன்பான எம் புலம்பெயர் தமிழீழ நெங்சங்களே, எம் உறவுகளின் அவல நிலையைப் பாருங்கள்! திங்கள் ஒன்றில் நாம் பருகும் தேனீருக்கும், கோப்பிக்கும் செலவிடும் பணத்தில் மண்ணில் ஒரு குடும்பமே வாழும் என்பதை நீங்கள் அறிவீர்களா?

ஸ்ரீலங்கா அரங்கேற்றிய கொடூர யுத்தத்திற்கு பலியாகிய எம் உறவுகள் ஒரு பக்கம், தமது உறவுகளை மட்டுமன்றி அவையவங்களையும் இழந்து அனாதைகளாக பரிதவிக்கும் உறவுகளின் பரிதாபங்கள் மறுபுறம்.

இவர்களை யார் வாழ வைப்பார்கள் என்ற கேள்விக்கு விடை பகருகின்றார்கள் எம் புலம் பெயர் உறவுகள்.

கனடா வாழ் எம் தமிழீழ உறவுகள் தொடர்ந்தும் தாயக உறவுகளுக்கு பல்வேறு வழிகளிலும் உதவி வரும் வகையில், அண்மையில் “கனடா வாழ வைப்போம்” மனித நேய அமைப்பினூடாக எம் உறவுகளிற்காக ஒரு தொகைப் பணத்தினை அனுப்பி வைத்தனர்.

இதனூடாக பதினொரு உறவுகள் தலா பத்தாயிரம் ரூபாவைப் பெற்று பயனடைந்துள்ளனர்.

கடந்த 10 நாட்களுக்கு முன்னரும் “கனடா வாழ வைப்போம்” மனித நேய அமைப்பினர், கியூபெக் தமிழ் சமூகத்தின் ஒலிம்பிக் மெய்வல்லுனர் போட்டியூடாக திரட்டிய 1000 வெள்ளிகளையும் தாயகத்திற்கு அனுப்பி 11 உறவுகள் பயனடையச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





1 Response to வாழ வைக்க நாம் முன்வருவோம் (படங்கள் இணைப்பு)

  1. Unknown Says:
  2. nam uravugaluku adikamaga nammal mudintathai seivomnam uravugaluku adikamaga nammal mudintathai seivom

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com