சென்னையில் நேற்று (14.1.2012) நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் துணைப் பிரதமருமான அத்வானி, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி,தமிழக பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் தலைவர் இல.கணேசன், இந்து முன்னணி ராம.கோபாலன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய ‘சோ’, ‘’எதிர் வரும் லோக்சபா தேர்தலுக்குப் பின், புதிய மத்திய அரசை அமைப்பதில், அ.தி.மு.க.,வின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருக்கும்.
ஒருவேளை, அக்கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்காமல் போய், மதச்சார்பற்ற கட்சிகள் என்ற பெயரில் தடை கிளம்புமானால், ஜெயலலிதாவை பிரதமராக்க பாஜக ஒத்துழைக்க வேண்டும்’’ என்றார்.
நிகழ்ச்சியை முடித்துவிட்டு, விமானம் மூலம் அத்வானி டில்லிக்கும், மோடி ஆமதாபாத்துக்கும் சென்றனர்.



0 Responses to ஜெயலலிதாவை பிரதமராக்க ஒத்துழைக்க வேண்டும்: பாஜகவுக்கு கோரிக்கை