இலங்கையின் ஐக்கிய நாடுகளுக்கான பிரதி நிரந்தரப் பிரதிநிதி சவேந்திர சில்வா, பான் மூனின் அமைதிக்காப்பு படைக்கான சிரேஸ்ட ஆலோசனைக்குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறித்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பில் தாம் பான் கீ மூனுக்கு கடிதம் எழுதியுள்ளதாக நவநீதம்பிள்ளை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் இறுதிப்போரின் போது இடம்பெற்ற போர்க் குற்றச்சாட்டுக்களுக்கு, அப்போது 58 வது படைப்பிரிவின் தளபதியாக கடமையாற்றிய சவேந்திர சில்வா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில், அரச அமைதிகாப்பு படைகளுக்கான பான் கீ மூனின் ஆலோசனைக் குழுவுக்கு சவேந்திர சில்வாவை, ஐக்கிய நாடுகளுக்கான ஆசியக்குழுவும் மத்தியக்கிழக்கு குழுவுமே நியமித்துள்ளன.
எனவே, போர்க்குற்ற சந்தேகத்திலுள்ள சவேந்திரவின் நியமனம் தொடர்பில் தமது அலுவலகம் உரிய கவனம் செலுத்தி வருவதாக நவநீதம்பிள்ளை குறிப்பிட்டார்.
இந்தநிலையில், நவநீதம்பிள்ளையின் கருத்து குறித்து ஐக்கிய நாடுகளின் பேச்சாளர் உடனடியாக எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை.
ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான பிரதிநிதி தரப்பும் நவநீதம்பிள்ளையின் கருத்துக் குறித்து உடனடியாக விமர்சனம் எதனையும் வெளியிடவில்லை.
சவேந்திர சில்வாவின் நியமனம் குறித்து நவநீதம்பிள்ளை, மூனிடம் கேள்வி
பதிந்தவர்:
தம்பியன்
14 February 2012



0 Responses to சவேந்திர சில்வாவின் நியமனம் குறித்து நவநீதம்பிள்ளை, மூனிடம் கேள்வி