Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மீனவர்கள் இருவர் இத்தாலி கப்பல் பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து இந்திய அயலுறவுத் துறை அமைச்சு இத்தாலி தூதுவரை நேரில் அழைத்து கண்டனம் தெரிவித்துள்ளதாக தெரியவருகின்றது.

கேரளா கொல்லம் கடற்பகுதியில் மீன் பிடித்து திரும்பிய இரு மீனவர்களை இத்தாலி கப்பல் பாதுகாவலர் சுட்டுக் கொன்றனர்.

பின்னர் இந்திய அதிகாரிகளால் அவர்கள் பிடிக்கப்பட்டு விசாரணையின் போது கொள்ளையர்கள் என நினைத்து தவறுதலாக தாம் சுட்டுவிட்டதாக கூறினர்.

தற்போது டெல்லியில் உள்ள இந்தியாவுக்கான இத்தாலி தூதர் கியாகோமா சான்பெலிஸ் டி மான்டிபோர்ட்டேயை இந்திய அயலுறவுத் துறை அமைச்சக செயலாளர் எம். கணபதி இன்று நேரில் வரவழைத்து கண்டணத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்துள்ளதாக அறிய முடிகின்றது.

0 Responses to மீனவர் சுடப்பட்ட விவகாரம் - இத்தாலி தூதுவரை அழைத்து இந்தியா கண்டனம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com