Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிறீலங்காவுக்கு வந்த இந்திய சுப்பிரமணிய சுவாமி கூறிய கருத்து சிங்கள இனவாத அரசுக்கு ஆதரவானது என்று பல தமிழ் ஊடகங்கள் எழுதியுள்ளன. ஆனால் சுவாமி, சோ போன்றவர்களை கருத்துக் கூறவிட்டால் நான் சொல்லமாட்டேன், நான் சொல்லமாட்டேன் என்று எல்லா உண்மைகளையும் அவிழ்த்து விட்டுவிடுவார்கள்.

போர்க் குற்றம் தொடர்பாக சுவாமி தெரிவித்த கருத்தை சரியாக ஊடுருவி நோக்கினால் மகிந்த ராஜபக்ஷவும், சகோதரர்களும் தலை தலையாக அடிக்க வேண்டும். போர்க் குற்றம் நடைபெற்றமைக்கு ஆதாரம் இல்லை என்று சுவாமி சொல்லியிருக்கிறார். ஆதாரம் இல்லாத காரணத்தால் மட்டுமே மகிந்த குற்றத்தில் இருந்து தப்பிவிடுகிறார்கள் என்ற கருத்து மிக ஆபத்தானது.

சுவாமி போர்க்குற்றமே நடைபெறவில்லை என்று தெட்டத் தெளிவாக வரையறுத்துக் கூறவில்லை. இதுவரை இந்தியாவின் ஆளும் காங்கிரசும் போர்க்குற்றம் நடைபெறவில்லை என்று ஒரு வார்த்தை தெரிவிக்கவில்லை. எனவே மற்றைய ஆதாரங்களை வைத்து வழக்கை முன்னெடுக்க காங்கிரசின் மௌனமும், சுவாமியின் சாட்சியம் இல்லை கருத்துமே போதுமானதாகும்.

இதே தவறை ஐ.தே.க தலைவர் ரணிலும் இழைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அவர் கருத்துரைக்கும்போது, சிறீலங்கா போர்க்குற்ற விசாரணை நீதிமன்றில் பதிவு செய்யாத காரணத்தால் அதன் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்று கூறியிருந்தார். சிங்கள தலைவரான அவரே போர்க் குற்றம் நடைபெறவில்லை என்பதை தெட்டத்தெளிவாகக் கூறவில்லை. ரணிலின் கருத்தும் சுப்பிரமணியசுவாமியின் கருத்துப்போலவே மறைமுகமாக போர்க் குற்றம் நடைபெற்றுள்ளதை ஒப்புக் கொள்கிறது.

சிறீலங்காவில் போர்க்குற்றமே நடைபெறவில்லை என்று அதற்கு உதவிய இந்தியா, சீனா, பாகிஸ்தான், ரஸ்யா போன்ற நாடுகளில் எந்தவொரு நாடுமே தெரிவிக்கவில்லை. இப்போது தமிழர் தன்மானத்தின் எதிரியான சுப்பிரமணியசுவாமிகூட அதை மறுக்காமல் கருத்துரைத்திருப்பது சிங்கள ஆளும் வர்க்கத்திற்கு பெரும் பாதகமாகவே அமைந்துள்ளது.

வை திஸ் போர்க்குற்றம்..? என்று சுவாமி – ரணில் இருவரும் குழப்பமடைந்துள்ளார்கள். ஆனால் வை திஸ் கொலை வெறி பாடலை நன்கு ரசித்து பார்டியும் வைத்தவர் நமது மன்மோகன் சிங். அவரிடம் சென்று கேட்டால் கொலைவெறிக்கு தண்டனை கொடுக்கும் விசாரணைதான் போர்க்குற்ற நீதி மன்று என்றும் அது ஒல்லாந்து ஹேக் நகரில் இருக்கிறது என்றும் இருவருக்கும் புரிய வைப்பாரோ..? என்பது சிறீமான் பொது ஜனத்தின் இன்னொரு கொலை வெறிக் கேள்வியாகும்.

0 Responses to வை திஸ் போர்க்குற்றம்.. சுவாமி – ரணில் குழப்பம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com