இலங்கை இனப் பிரச்சினைக்கு “தனி ஈழம்' ஒன்று தான் நிரந்தர தீர்வாக அமைய முடியும். இதற்காக வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தி.மு.க.வின் தலைவர் கருணாநிதி தெரிவித்து வரும் கருத்தை பா.ஜ.க. முற்றிலும் நிராகரிப்பதாகவும் இது போன்ற கருத்தை ஏற்க முடியாது என்றும் சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார்.
இலங்கை இனப் பிரச்சினைக்கு ஒன்றுபட்ட இலங்கையில்தான் நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்று இலங்கை தமிழர்கள் மற்றும் இலங்கையின் தமிழர்களின் அரசியல் கட்சிகள் மற்றும் அதன் தலைவர்கள் வலியுறுத்தி வருவதை எனது தலைமையிலான குழுவால் இலங்கையில் காண முடிந்தது.
எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜுடன் ஸ்ரீரங்கா எம்.பி. சந்திப்பு
இலங்கை தமிழ் எம்.பி. ஸ்ரீரங்கா மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ்ஜை கடந்த புதன்கிழமை மாலை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசியதாக சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார்.
இந்த சந்திப்பு இந்திய நாடாளுமன்றத்தில் உள்ள சுஷ்மா சுவராஜின் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற சந்திப்பின்போது சுஷ்மா சுவராஜ் தலைமையிலான இந்திய எம்.பி.க்கள் குழு இலங்கையில் இருந்து திரும்பிய பிறகு அவர்களின் பொதுவான கருத்து குறித்து சுஷ்மாவிடம் அவர் கருத்துகளை பகிர்ந்து கொண்டதாகவும் இந்த சந்திப்பு ஒரு மரியாதை நிமித்தமாக நடைபெற்றதாகவும் சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார்.
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, சுஷ்மா சுவராஜ் தலைமையிலான இந்திய எம்.பி.க்கள் குழுவை சந்தித்தபோது, இலங்கை தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு அளிக்க வகை செய்யும் 13ஆவது அரசியல் சட்டத் திருத்தம் குறித்து எந்த விதமான விவாதம் நடத்தவில்லை என்ற தகவல்கள் இலங்கையில் இருந்து வெளிவருவது குறித்து சுஷ்மா சுவராஜிடம் கேட்டதற்கு எனது தலைமையிலான இந்திய எம்.பிக்கள் இலங்கை ஜனாதிபதி ராஜபக்சவை இலங்கையில் சந்தித்த போது தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்க வகை செய்யும் 13ஆவது அரசியல் சட்டத் திருத்தம் குறித்து விவாதிக்கப்பட்டதை உறுதிப்படுத்தினார்.
இலங்கை இனப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் அரசியல் சட்டத்தின் 13ஆவது திருத்தப்படி அதிகாரப் பகிர்வு வழங்குவது குறித்து, இலங்கை நாடாளுமன்ற கட்சிகளின் குழு ஒன்றை அமைத்து விவாதித்து முடிவு காணும் வகையில் இலங்கை அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
ஆனால் இந்த குழுவில் பங்குகொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மறுத்து வருகிறது என்றும் இந்திய நாடாளுமன்ற குழுவினர் அவர்களை வலியுறுத்தி இந்த குழுவில் கலந்து கொள்ளச் செய்யவேண்டும் என இலங்கை ஜனாதிபதி தங்களிடம் கேட்டுக் கொண்டதாக இந்திய எம்.பி.க்கள் குழுவை தலைமை தாங்கி இலங்கைக்கு சென்று வந்த சுஷ்மா சுவராஜ் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
தனி ஈழம் தான் நிரந்தர தீர்வு என்ற கருணாநிதியின் கருத்தை ஏற்க முடியாது!: சுஷ்மா
பதிந்தவர்:
ஈழப்பிரியா
06 May 2012



13 vathu sata thirutham amal seiavital arasiyalai vidu poga thayara
inthiya arasiyal vathikal onru padda ilankaiyil thamilarukku theervu enru evvalavu kaalam koori varukinranar.avarkalaal athai pera mudinthathaa??? thamathu ul naaddu pirachchinaikaludan ilankai ina alippai oppidukinranar.ilankaiyil nadakkum nikalvukal entha oru naddilum nadakkavillai.aakavey,pirivinai korum marravarkalukkum avarkalin pirachchinaikalukkum eelath thamilar ethir nokkum pirachchinaikkum verupaadu undu.eddatha kaniyai eppadiyum parippathu enpathu inthiya arasiyalvathikalin karuththu.thamilarai poruththa maddil athu eddatha kani maddum alla,kani enru inthiyarukku thonruvathu kaay aakavey ullathu.per avalam nadanthu moonru aandukal kadanthum thamilar oru samaththuvam aana thesiya inam enpathu erkappadavillai.thani eelam onru thaan avarkal ippadi innoru ina alivai thaduththu nal vaalvu nalkum.kolumbuvil ulla thamilar enrum inak kalavara payaththudan vaalukinranar.evaraiyum kurai koorathu orey pathai,thamilinam kanda maaveeran kaddiya pathaiyil eelam adaivathil uruthiyaka ninru peruvom.