யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை பொலிஸார் இருவர் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டுக்கு ‘ஆவா குழு’ என்கிற அணி உரிமை கோரியுள்ளது.
இந்த வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் ஆவா குழு என்கிற பெயரோடு உரிமை கோரும் துண்டுப்பிரசுரங்கள் யாழ் நகரப்பகுதிகளில் ஒட்டப்பட்டிருந்தன.
இந்த துண்டுப்பிரசுரத்தில் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்ட மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதாகவும், பல்கலைக்கழக மாணவர் மீது தாக்குதல் மேற்கொண்ட பொலிஸாரின் மீதே தாம் தாக்குதல் மேற்கொண்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், குறித்த துண்டுப்பிரசுரம் உண்மையானதா இல்லையா என்பது தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்த 05 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்பட்டுள்ளன.
இந்த வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் ஆவா குழு என்கிற பெயரோடு உரிமை கோரும் துண்டுப்பிரசுரங்கள் யாழ் நகரப்பகுதிகளில் ஒட்டப்பட்டிருந்தன.
இந்த துண்டுப்பிரசுரத்தில் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்ட மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதாகவும், பல்கலைக்கழக மாணவர் மீது தாக்குதல் மேற்கொண்ட பொலிஸாரின் மீதே தாம் தாக்குதல் மேற்கொண்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், குறித்த துண்டுப்பிரசுரம் உண்மையானதா இல்லையா என்பது தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்த 05 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்பட்டுள்ளன.




0 Responses to பொலிஸார் மீதான வாள்வெட்டுக்கு ‘ஆவா குழு’ உரிமை கோரல்!