தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் கோரிக்கைகளைப் பரிசீலிக்கத் தவறும் அரசியலபைப்பு வழிநடத்தல் குழுவிலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும், பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனும் விலக வேண்டும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஈபிஆர்எல்எப்-இன் தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளதாவது, “வடக்கு- கிழக்கு இணைக்கப்படாது என்பது பற்றியோ, சமஷ்டி அடிப்படையிலான தீர்வு இல்லை என்பது பற்றியோ, பௌத்தத்திற்கு முன்னரிமை வழங்குவது தொடர்பிலோ இரா.சம்பந்தனும், எம்.ஏ.சுமந்திரனும் எந்தவித ஆட்சேபனையெதனையும் தெரிவித்திருக்கவில்லை என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளரும் அமைசச்சருமான மஹிந்த அமரவீர கூறுகின்றார். அவரும், அரசியலமைப்பு பேரவை வழிநடத்தல் குழுவில் அங்கம் வகிக்கின்றார்.
இந்நிலையில் பெரும்பான்மையாக கொண்ட வழிகாட்டல் குழுவில் இரா.சம்பந்தன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகிய இருவரும் இருந்து எதனை செய்கின்றார்கள். எனவே, தமிழ் மக்களிற்கு வரலாற்று துரோகமிழைக்கும் இத்தகைய நடவடிக்கைகளினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சி என்கிற வகையில் ஈபிஆர்எல்எப் ஏற்றுக்கொள்ளாது. முதலில் இரா.சம்பந்தன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகிய இருவரும் தமிழ் மக்கள் முன்னராக வந்து வழிகாட்டல் குழுவில் நடப்பவற்றை தெளிவுபடுத்த வேண்டும். ” என்றுள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளதாவது, “வடக்கு- கிழக்கு இணைக்கப்படாது என்பது பற்றியோ, சமஷ்டி அடிப்படையிலான தீர்வு இல்லை என்பது பற்றியோ, பௌத்தத்திற்கு முன்னரிமை வழங்குவது தொடர்பிலோ இரா.சம்பந்தனும், எம்.ஏ.சுமந்திரனும் எந்தவித ஆட்சேபனையெதனையும் தெரிவித்திருக்கவில்லை என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளரும் அமைசச்சருமான மஹிந்த அமரவீர கூறுகின்றார். அவரும், அரசியலமைப்பு பேரவை வழிநடத்தல் குழுவில் அங்கம் வகிக்கின்றார்.
இந்நிலையில் பெரும்பான்மையாக கொண்ட வழிகாட்டல் குழுவில் இரா.சம்பந்தன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகிய இருவரும் இருந்து எதனை செய்கின்றார்கள். எனவே, தமிழ் மக்களிற்கு வரலாற்று துரோகமிழைக்கும் இத்தகைய நடவடிக்கைகளினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சி என்கிற வகையில் ஈபிஆர்எல்எப் ஏற்றுக்கொள்ளாது. முதலில் இரா.சம்பந்தன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகிய இருவரும் தமிழ் மக்கள் முன்னராக வந்து வழிகாட்டல் குழுவில் நடப்பவற்றை தெளிவுபடுத்த வேண்டும். ” என்றுள்ளார்.




0 Responses to கோரிக்கைகளைப் பரிசீலிக்கத் தவறும் வழிநடத்தல் குழுவிலிருந்து சம்பந்தனும், சுமந்திரனும் விலக வேண்டும்: சுரேஷ்