வடக்கு அகதி முகாம்களில் சுமார் 60க்கும் மேற்பட்ட மன நோயாளிகள் காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உறவினர்களினால் பொறுப்பு ஏற்கப்படாத 60க்கும் மேற்பட்ட மன நோயாளிகள் வடக்கு இடம்பெயர் முகாம்களில் தங்கியுள்ளதாகவும் இவர்கள் அங்கொடை மனநோய் மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு சிகிச்சை அளிக்கப்பட்டதன் பின்னர் குணமடையும் நபர்கள் முதியோர் இல்லங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக அமைச்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வவுனியா இடம்பெயர் முகாம்களின் மரண வீதம் ஒரு லட்சத்திற்கு 5.2 ஆகும் எனவும் தேசிய மரண வீததத்துடன் ஒப்பீடு செய்யும் போது மிகவும் சாதகமான நிலைமை உருவாகியுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டள்ளனர்.
ஐந்து வயதுக்கும் குறைந்த குழந்தைகளின் உயிரிழப்புக்களுக்கு நிமோனியா மற்றும் வயிற்றோட்டம் ஆகிய நோய்களே பிரதான காரணி என தெரிவிக்கப்படுகிறது.
0 Responses to மனநோயாளியாக காணப்படும் எம் மக்கள்