இலங்கைத் தமிழர்களின் நிலை குறித்தும், அவர்களின் மறுவாழ்வுத் தொடர்பாக இலங்கை அரசுடன் இணைந்து இந்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் மாநிலங்களவையில் இன்று அறிக்கை தாக்கல் செய்த அமைச்சர் கிருஷ்ணா இவ்வாறு கூறினார்.
போரினால் உள்நாட்டில் இடம் பெயர்ந்த மக்கள் அவர்கள் வாழ்ந்த இடங்களிலேயே மீண்டும் குடியமர்த்தப்படுவதை உறுதிசெய்ய இலங்கை அரசுடன் இணையந்து பணியாற்றி வருகிறோம் என்று கூறிய அமைச்சர் கிருஷ்ணா, அந்த 3 இலட்சம் தமிழர்களுக்கும் மனிதாபிமான உதவிகள் அனைத்தும் உடனடியாகக் கிடைக்கவும், அவர்கள் வாழ்ந்த இடங்களில் மீள் குடியமர்த்தவும் உடனடிக் கவனம் செலுத்தப்படுகிறது என்றார்.



0 Responses to ஈழத் தமிழர்கள் வாழ்ந்த இடத்தில் குடியமர்த்தப்படுவார்கள்: எஸ்.எம்.கிருஷ்ணா