Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையின் போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பிலான ஆவணங்களை வெளியிட்டு வரும், செனல் 4 தொலைக் காட்சிக்கு எதிராக லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

நேற்றைய தினம் கொழும்பு அரசாங்கத்தின் கொலைக்குற்றங்கள் தொடர்பில், செனல் 4 தொலைகாட்சி வெளியிட்ட ஆவணப்படம் ஒன்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.

ஏற்கனவே பலமுறை அரசாங்கத்துக்கு எதிராக வெளியிடப்பட்டவைப் போலவே, இந்த முறையும் செனல் 4 தொலைக்காட்சி இந்த ஆவணப்படத்தை வெளியிட்டுள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும், இதில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதாக இலண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரம் தெரிவித்துள்ளது.

குறித்த அறிக்கை செனல் 4 தொலைக்காட்சியின் இணையத்தளத்திலேயே பிரசுரிக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.







http://www.channel4.com/news/un-leak-points-to-crimes-against-humanity-in-sri-lanka-war

0 Responses to செனல் 4 ஊடகத்துக்கு எதிராக இலங்கை உயர்ஸ்தானிகரகம் அறிக்கை (காணொளி)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com