கனடிய தமிழ் இளையோர் அமைப்பு நடத்திய மாணவர் எழுச்சி நாள் நிகழ்வு கடந்த
ஞயாயிற்றுக்கிழமை ஜுன் 12ஆம் திகதி பிற்பகல் நடைபெற்றது.
தியாகி பொன். சிவகுமாரன் நினைவாக ஆண்டு தோறும் நடத்தப்படும் இந்நிகழ்வு இம்முறையும் சிறப்பாக கனடா கந்தசுவாமி கோவில் மண்டபத்தில் நடைபெற்றது.
கனடிய தேசியக்கொடியேற்றம், தமிழீழ தேசியக் கொடியேற்றம் ஆகியவற்றுடன் ஆரம்பமாகிய இந்நிகழ்வில் தொடர்ந்து அகவணக்கமும் மலர்வணக்கமும் இடம்பெற்றதையடுத்து கலைநிகழ்வுகள் அரங்கேறின.
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களும், பாடசாலை மாணவர்களும் இணைந்து
இந்நிகழ்வுகளை வழங்கியிருந்தனர். இதில் பல மாணவர்கள் தமது உரைகளை நிகழ்தினர்.
மண்டபம் நிறைந்த மக்களுடன் நடைபெற்ற இந்நிகழ்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டதுடன் இறுதியில் தேசியக் கொடிகள் இறக்கப்பட்டு நிறைவை எய்தியது.








0 Responses to கனடிய இளையோர் அமைப்பு முன்னெடுத்த மாணவர் எழுச்சிநாள் (படங்கள் இணைப்பு)