Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஈழத்தமிழர்களை கொன்று குவித்த இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும், இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதற்காக தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு பாராட்டு மற்றும் நன்றி தெரிவிக்கும் வகையில் நாம்தமிழர் கட்சி சார்பில் நாளை (18-ந்தேதி) மாலை சைதாப்பேட்டை தேரடி திடலில் பொதுக்கூட்டம் நடக்கிறது.

நாம் தமிழர் கட்சி தலைவர் டைரக்டர் சீமான், நடிகர் சத்யராஜ், டைரக்டர் மணிவண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்கள்.

பேராசிரியர் தீரன், தமிழ் முழக்கம் சாகுல்அமீது, கலைக்கோட்டுதயம், டைரக்டர் ஆர்.கே.செல்வமணி, தடா சந்திரசேகர், கோட்டை குமார் அய்யநாதன், பால்நியூமன் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

0 Responses to ஜெயலலிதாவுக்கு பாராட்டு கூட்டம்: சீமான் - சத்யராஜ் பங்கேற்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com