Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிறீலங்காவின் போகம்பர சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மீது சிறீலங்கா சிறை அதிகாரிகள் மேற்கொண்ட தாக்குதல்களால் பலர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 14 ஆம் நாள் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் ரமேஸ் றூபச்சந்திரன் (38), வீரசாமி சிவசுப்பிரமணியம் (35), கணேசன் புஸ்பராஜா (20), இராமையா தேவராஜா (34), ஆர் சண்முகராஜா, விஸ்வநாதன் ரமேஸ்குமார், வேலு ஜோகராஜா, பெர்ணான்டோ ஆகியோர் படுகாயமடைந்துள்ளதாக தமிழத் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி அரியனேந்திரன் சிறீலங்கா அரச தலைவருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

1983 ஆம் ஆண்டு குட்டிமணிக்கு நடந்தது தான் உங்களுக்கும் நடக்கும் என தெரிவித்தவாறே சிங்கள சிறை அதிகாரிகள் தமிழ் கைதிகளை தாக்கியதாகவும், காயமடைந்தவர்கள் வைதியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற இனக்கலவரத்தில் சிறீலங்கா படையினரும், சிறை அதிகாரிகளும் இணைந்து வெலிக்கடை சிறையில் இருந்த தமிழ் கைதிகளை கோரமாக படுகொலை செய்திருந்தனர்.

இந்த சம்பவத்தில் குட்டிமணி, ஜெகன், தங்கத்துரை உட்பட 47 இற்கு மேற்பட்ட அரசியல் கைதிகள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

இந்தியாவில் தங்கியிருந்த குட்டிமணி மற்றும் ஜெகன் ஆகியோரை தி.மு.க தலைவர் கருணாநிதியே சிறீலங்காவிடம் ஒப்படைந்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

0 Responses to குட்டிமணிக்கு நடந்தது தான் உங்களுக்கும் – சிறையில் தாக்குதல்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com