இலங்கையில் தமிழீழம் அமைப்பதற்கு பாரதிய ஜனதா கட்சி ஒரு போதும் உதவி செய்யாது என்று, அந்த கட்சியின் சிரேஸ்ட தலைவர் வேங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகம் ஒன்றுக்கு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியுடன் இணைந்து போட்டியிடுகின்ற வை.கோவின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழீழம் பெற்றுத் தரப்படும் என்று உறுதியளித்துள்ளது.
இந்த நிலையில் இதுகுறித்து பாரதிய ஜனதா கட்சியின் நிலைப்பாட்டை ஊடகங்கள் கேட்டபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அரசியல் தீர்வு ஒன்று காணப்படுமாக இருந்தால், அது ஐக்கிய இலங்கைக்குள் நாடு பிளவுப்படுத்தப்படாமல் மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.




0 Responses to தமிழீழம் அமைப்பதற்கு பா.ஜ.க ஒருபோதும் உதவி செய்யாது! - வெங்கையா நாயுடு