தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், தமிழ் மக்களின் விடுதலைக்கும் எதிரான சக்திகளை தமிழ் மக்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்று வடக்கு மாகாண சபை உறுப்பினரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட வேட்பாளருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிப்பு வீதத்தை அதிகரித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தொடர்ந்தும் ஒரு பலமான கட்சியாக வைத்திருக்க வேண்டும். இதன்மூலம் தமிழ் மக்களின் விடுதலைப் பயணம் தடையின்றி முன்னெடுத்துச் செல்ல வழிவகுக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புன்னாலைக்கட்டுவன் ஆயற்கடவை பிள்ளையார் ஆலய மண்டபத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போதே தர்மலிங்கம் சித்தார்த்தன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “தமிழ் மக்களுடைய அபிலாஷைகளையும் உணர்வுகளையும் தொடர்ந்து நசுக்கும் தென்னிலங்கைக் கட்சிகளின் தமிழ் வேட்பாளர்களை தமிழ் மக்கள் முற்றுமுழுதாக நிராகரிக்க வேண்டும். ஏனெனில் தென்னிலங்கைக் கட்சிகள் பெரும்பான்மை இன நலன்கள், அபிலாசைகளை பிரதிபலிப்பவை. தமிழ் மக்களின் நியாயபூர்வமான உணர்வுகளை மதிப்பவை அல்ல. கடந்தகால வரலாறு இதனை நிரூபித்துள்ளது.
தேர்தல் போட்டியிடும் ஏனைய சில தமிழ் கட்சிகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலவீனப்படுத்துகின்ற நோக்கோடு போட்டியிடுகின்றன. தமிழ்த் தேசியவாதிகள் என காண்பித்து தமிழ் மக்களின் வாக்குகளை சின்னாபின்னப்படுத்தி தமிழ் மக்களின் பலத்தை உடைத்துவிடுவதற்கு அவை செயற்படுகின்றன. இவர்கள் தமிழ் மக்களின் நலன் சார்ந்ததாக இல்லையென்பது வெள்ளிடைமலை. இவர்களுக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் தமிழ் மக்களைப் பலவீனப்படுத்த மாத்திரமே உதவும்.
எனவே இவர்களைத் தமிழ் மக்கள் ஒட்டுமொத்தமாக நிராகரித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு முழுமையான ஆதரவை வழங்க வேண்டும். தமிழ் மக்களின் விடுதலைப் பயணத்தில் தடையின்றி முன்னேறுவதற்கு அனைத்து தமிழ் மக்களும் கட்டாயம் வாக்களித்து ஆதரவை வழங்க வேண்டும்.” என்றுள்ளார்.
எதிர்வரும் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிப்பு வீதத்தை அதிகரித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தொடர்ந்தும் ஒரு பலமான கட்சியாக வைத்திருக்க வேண்டும். இதன்மூலம் தமிழ் மக்களின் விடுதலைப் பயணம் தடையின்றி முன்னெடுத்துச் செல்ல வழிவகுக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புன்னாலைக்கட்டுவன் ஆயற்கடவை பிள்ளையார் ஆலய மண்டபத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போதே தர்மலிங்கம் சித்தார்த்தன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “தமிழ் மக்களுடைய அபிலாஷைகளையும் உணர்வுகளையும் தொடர்ந்து நசுக்கும் தென்னிலங்கைக் கட்சிகளின் தமிழ் வேட்பாளர்களை தமிழ் மக்கள் முற்றுமுழுதாக நிராகரிக்க வேண்டும். ஏனெனில் தென்னிலங்கைக் கட்சிகள் பெரும்பான்மை இன நலன்கள், அபிலாசைகளை பிரதிபலிப்பவை. தமிழ் மக்களின் நியாயபூர்வமான உணர்வுகளை மதிப்பவை அல்ல. கடந்தகால வரலாறு இதனை நிரூபித்துள்ளது.
தேர்தல் போட்டியிடும் ஏனைய சில தமிழ் கட்சிகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலவீனப்படுத்துகின்ற நோக்கோடு போட்டியிடுகின்றன. தமிழ்த் தேசியவாதிகள் என காண்பித்து தமிழ் மக்களின் வாக்குகளை சின்னாபின்னப்படுத்தி தமிழ் மக்களின் பலத்தை உடைத்துவிடுவதற்கு அவை செயற்படுகின்றன. இவர்கள் தமிழ் மக்களின் நலன் சார்ந்ததாக இல்லையென்பது வெள்ளிடைமலை. இவர்களுக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் தமிழ் மக்களைப் பலவீனப்படுத்த மாத்திரமே உதவும்.
எனவே இவர்களைத் தமிழ் மக்கள் ஒட்டுமொத்தமாக நிராகரித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு முழுமையான ஆதரவை வழங்க வேண்டும். தமிழ் மக்களின் விடுதலைப் பயணத்தில் தடையின்றி முன்னேறுவதற்கு அனைத்து தமிழ் மக்களும் கட்டாயம் வாக்களித்து ஆதரவை வழங்க வேண்டும்.” என்றுள்ளார்.
0 Responses to த.தே.கூ.வுக்கு எதிரான சக்திகளை தமிழ் மக்கள் தோற்கடிக்க வேண்டும்: த.சித்தார்த்தன்