புதிய அரசியலமைப்பில் சகல இன மக்களினதும் உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையில் அதிகாரங்களைப் பகிர்வது தொடர்பில் பேச்சுக்கள் ஆரம்பித்துள்ளன. அதனொரு கட்டமாக ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் பேச்சுக்களில் ஈடுபட்டு வருகின்றன என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்று இரண்டாவது ஆண்டு நிறையும் தருணத்தில் புதிய அரசியலமைப்பு நடைமுறைக்கு வரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமரர் மாதுலுவாவே சோபித தேரரின் ஓராண்டு நிறைவு நினைவஞ்சலி நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்றது. அங்கு கருத்து வெளியிடும் போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
பிரதமர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “புதிய அரசியலமைப்பு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினதோ, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினதோ அல்லது பாராளுமன்றத்துடையதோ அல்லாது மக்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் அது அமைவது அவசியம். புதிய தேர்தல் முறை, நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்குதல், விசேட நீதிமன்றம் மற்றும் புதிய அரசியலமைப்பு தொடர்பில் அரசாங்கம் முக்கிய கவனம் செலுத்தி வருகிறது.
இந்நிலையில் அரசாங்கத்தின் இத்தகைய செயற்பாடுகள் மீதான விமர்சனமும் குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
அதிகாரப் பகிர்வு விடயத்தில் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது. சகல இன மத மக்களினதும் உரிமைகள் உறுதிப்படுத்தப்படும் வகையில் அது அமைவது முக்கியம். அரசியலமைப்பிற்கிணங்க அதிகாரப் பகிர்வு தொடர்பில் இரு பிரதான கட்சிகள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுடன் பேசி வருகின்றன. பல்வேறு தரப்பிலிருந்தும் கருத்துக்கள் பெறப்பட்டு அதற்கேற்ப செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்.” என்றுள்ளார்.
ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்று இரண்டாவது ஆண்டு நிறையும் தருணத்தில் புதிய அரசியலமைப்பு நடைமுறைக்கு வரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமரர் மாதுலுவாவே சோபித தேரரின் ஓராண்டு நிறைவு நினைவஞ்சலி நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்றது. அங்கு கருத்து வெளியிடும் போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
பிரதமர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “புதிய அரசியலமைப்பு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினதோ, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினதோ அல்லது பாராளுமன்றத்துடையதோ அல்லாது மக்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் அது அமைவது அவசியம். புதிய தேர்தல் முறை, நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்குதல், விசேட நீதிமன்றம் மற்றும் புதிய அரசியலமைப்பு தொடர்பில் அரசாங்கம் முக்கிய கவனம் செலுத்தி வருகிறது.
இந்நிலையில் அரசாங்கத்தின் இத்தகைய செயற்பாடுகள் மீதான விமர்சனமும் குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
அதிகாரப் பகிர்வு விடயத்தில் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது. சகல இன மத மக்களினதும் உரிமைகள் உறுதிப்படுத்தப்படும் வகையில் அது அமைவது முக்கியம். அரசியலமைப்பிற்கிணங்க அதிகாரப் பகிர்வு தொடர்பில் இரு பிரதான கட்சிகள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுடன் பேசி வருகின்றன. பல்வேறு தரப்பிலிருந்தும் கருத்துக்கள் பெறப்பட்டு அதற்கேற்ப செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்.” என்றுள்ளார்.




0 Responses to அதிகாரப் பகிர்வு தொடர்பில் ஐ.தே.க.வும், சு.கா.வும் இரா.சம்பந்தனுடன் பேசி வருகின்றன: ரணில் விக்ரமசிங்க