2017ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் வெளிநாட்டவர்களுக்கான சலுகை அளிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இம்முறை வரவு- செலவுத் திட்டத்தில் வெளிநாட்டவர்களுக்கான வரிகளை நீக்கி அவர்களை ஊக்குவித்து, வசதியான முறையில் நாட்டில் இடங்களை கொள்வனவு செய்யவும் முதலீடுகளை மேற்கொள்ளவும் இடமளித்துள்ளதோடு, உள்நாட்டு உற்பத்தியாளர்களை பாதிப்படைய செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற வரவு- செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசும் போதே மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
வருமான வரியை 12 வீதத்தில் இருந்து 28 வீதமாக அதிகரிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக இதன்போது சுட்டிக்காட்டிய அவர், 85 வீதமான மக்களிடம் இருந்து மறைமுக வரிகளை அரசாங்கம் அறவிட எதிர்பார்த்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இம்முறை வரவு- செலவுத் திட்டத்தில் வெளிநாட்டவர்களுக்கான வரிகளை நீக்கி அவர்களை ஊக்குவித்து, வசதியான முறையில் நாட்டில் இடங்களை கொள்வனவு செய்யவும் முதலீடுகளை மேற்கொள்ளவும் இடமளித்துள்ளதோடு, உள்நாட்டு உற்பத்தியாளர்களை பாதிப்படைய செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற வரவு- செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசும் போதே மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
வருமான வரியை 12 வீதத்தில் இருந்து 28 வீதமாக அதிகரிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக இதன்போது சுட்டிக்காட்டிய அவர், 85 வீதமான மக்களிடம் இருந்து மறைமுக வரிகளை அரசாங்கம் அறவிட எதிர்பார்த்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.




0 Responses to வரவு - செலவுத் திட்டத்தில் வெளிநாட்டவர்களுக்கே சலுகை - மஹிந்த குற்றச்சாட்டு!