இலங்கையில் தமிழ் மக்கள் தமது உரிமைகளுக்காக மீண்டும் போராட்டங்களை ஆரம்பிக்கலாம் என புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்:
இலங்கை இனப்பிரச்சினைக்கு சிறீலங்கா அரசாங்கம் சரியான தீர்வை இதுவரை முன்வைக்கவில்லை. இதனால் இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் தமது உரிமைகளுக்காக மீண்டும் போராட்டங்களை ஆரம்பிக்கலாம்.
இதற்கான காலம் வெகு தூரத்தில் இல்லை. சிறீலங்கா அரசாங்கத்தின் தூரநோக்கற்ற நிர்வாகமே இவ்வாறான நெருக்கடிகளுக்குக் காரணம் எனக் மேலும் கூறியுள்ளார்.
தமிழ் மக்கள் தமது உரிமைக்காக போராட்டங்களை ஆரம்பிக்கலாம் - விக்ரமபாகு கருணாரட்ன
பதிந்தவர்:
தம்பியன்
15 September 2009



0 Responses to தமிழ் மக்கள் தமது உரிமைக்காக போராட்டங்களை ஆரம்பிக்கலாம் - விக்ரமபாகு கருணாரட்ன