Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கை ராணுவ முகாம்களில் அடைத்துவைக்கப்பட்டுள்ள 3 லட்சம் தமிழர்களை விடுவிக்கக் கோரி சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் 14-09-09 அன்றுமனிதச் சங்கிலி போராட்டம் நடத்தினர்.

இலங்கையில் சுமார் 3 லட்சம் தமிழர்கள் வதை முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எந்த அடிப்படை வசதியும் செய்து கொடுக்கப்படாததால் பெரும் துயரத்துக்கு ஆளாகியுள்ளனர். இதை கண்டித்தும், இலங்கைத் தமிழர்களை அவர்களது சொந்த கிராமங்களில் குடியேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக் கோரியும், சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் இன்று காலை 11 மணி முதல் பகல் 1 மணி வரை மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தினர்.

கல்லூரி வாசலில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் சாலையின் இருபுறங்களிலும் நூற்றுக் கணக்கான மாணவர்கள் கைகோர்த்து நின்றனர். அப்போது, இலங்கை அரசை கண்டித்தும், இந்த விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் தலையிடக் கோரியும் வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை கையில் வைத்திருந்தனர்.

இலங்கை முகாம்களில் அவதிப்படும் தமிழர்களின் நிலையை நேரில் அறிய மனித உரிமைக் குழுவையும், நடுநிலைப் பத்திரிகையாளர்களையும் இலங்கைக்கு அனுப்பிவைத்து தமிழர்களை மீட்க முயற்சி எடுக்க வேண்டும் என்றும் மாணவர்கள் கோஷமிட்டனர்.

"உடைமை இழந்து வந்தவர்களின் உயிரையும் வதைப்பதா"
"தமிழர் உரிமையை நிலைநாட்டு"
"புத்தம் பேசும் சிங்களரே யுத்தம் புத்தம் சொன்னதா"
"ஐ.நா. சபையே தலையீடு செய்"
"இந்திய அரசே ஈழத் தமிழர்களுக்கு நிவாரணம் கொடு"
"தமிழக அரசே தமிழனை இழிவுபடுத்தாதே"
போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவர்கள் தாங்கியிருந்தார்கள்.



0 Responses to சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் மனிதச் சங்கிலி போராட்டம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com