Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மகிந்த கே.பி உடன் செய்துகொண்ட ரகசிய உடன்படிக்கையை அடுத்து தடுத்து வைக்கப்பட்டிருந்த முக்கிய புலி உறுப்பினர்கள் மூவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க குற்றம் சாட்டியுள்ளார். அவர்களில் முக்கியமானவரான கேணல் ராமைப் பயன்படுத்தி பொதுவேட்பாளர் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவானவர்கள் மீது அல்லது சரத் பொன்சேகா மீதோ தாக்குதல் நடத்தப்படலாம் என ரணில் கவலை வெளியிட்டுள்ளார். மேலும் செல்லகிரி, கிரிதரன் எனப்படுபவர்களே மீதி இரு முக்கிய புலி உறுப்பினர்களாவர் என ரணில் உறுதிபடத் தெரிவித்துள்ளர்.

கடற்படை அதிகாரியைக் கொலைசெய்த காரணத்தால் செல்லகிரி தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், தெயட்ட கிருல கண்காட்சியில் ஜனாதிபதியைக் கொலைசெய்ய முயற்சி செய்ததால் கிரிதரன் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் ரணில் குறிப்பிட்டுள்ளார். தடுத்து வைக்கப்பட்டுள்ள அப்பாவிப் பொதுமக்களை விடுவிக்க தடைவிதித்துவரும் அரசாங்கம் இப்போது புலி உறுப்பினர்களையே விடுதலை செய்வதாகக் குற்றம் சாட்டியுள்ள ரணில் இது ஜனாதிபதிக்கும் கே.பி க்கும் இடையிலான ரகசிய ஒப்பந்தத்தின் ஒரு பகுதியெனவும் கூறியுள்ளார்.

அதாவது தன்னைத் தவிர வேறு யாருக்காவது வாக்களித்தால் அது பயங்கரவாதத்தை ஆதரிப்பதாகும், புலிகளை புத்துயிர்ரூட்டும் என மகிந்த கூறிவருவதும், மகிந்த புலிகளுக்கு ஆதரவாக தற்போது செயல்படுவதாக ரணில் கூறிவருவதும் தேர்தல் நாடகமாக மாறியுள்ளது.

நன்றி: அதிர்வு


0 Responses to காவலிலிருந்த ராம், செல்லகிரி, கிரிதரன் ஆகிய 3 புலிகள் விடுதலை: ரணில்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com