Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எதிர்க்கட்சிகளின் தலைவரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க நேற்றிரவு அவசரமாக இந்தியா பயணமானார். தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டே அவர் இந்தியா சென்றுள்ளார் என்று கட்சி வட்டாரங்கள் என்று தெரிவித்தன. அவர் நாளை நாடு திரும்புவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசதலைவர் தேர்தல் இடம்பெற்ற பின்னர் எதிர்க்கட்சிகளின் தலைவர் இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இதுவாகும். சிறிலங்காவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், எதிர்க்கட்சி தலைவர் மேற்கொண்டுள்ள இந்திய விஜயம் முக்கியமானதாக கருதப்படுகிறது.

இதேவேளை, சிறிலங்கா சுதந்திர கட்சியின் மக்கள் அமைப்பு தலைவர் மங்கள சமரவீரவும் தற்போது சிறிலங்காவில் இல்லை என்றும் வெளிநாடு ஒன்றுக்கு சென்றிருப்பதாக தெரியவருகிறது.

0 Responses to எதிர்க்கட்சிகளின் தலைவர் ரணில் இந்தியா பயணம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com