Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பேஸ் புக் இணையத்தள சமூக வலைப் பின்னலில் உள்ள சிறீலங்கா வாடிக்கையாளர்களை சிறீலங்கா அரசு கண்காணித்து வருவதாக சிங்களப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் நடந்த முறைகேடுகள் உட்பட சிறீலங்காவுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் சிறீலங்காவில் உள்ள பலர் பேஸ் புக்கை பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து சிறீலங்காவில் உள்ள பேஸ் புக் பாவனையாளர்களை அரசு தீவிரமாக கண்காணித்து வருவதாக அறியப்படுகிறது.

பேஸ் புக் என்பது இணையத்தளம் மூலம் இயங்கும் ஒரு சமூக வலைப் பின்னலாகும், இதனூடாகப் பலசெய்திப் பரிமாற்றங்களும், புகைப்படங்களும் பரிமாறப்படுவதுடன், பல உறவினர்கள் நண்பர்கள் இதில் பின்னி இணைந்திருப்பதால், ஒருவரிடம் இருந்து மற்றவருக்குச் செல்லும் செய்திகள் நம்பகத்தன்மை உடையவையாகக் கருதப்படுகின்றது.

0 Responses to பேஸ் புக் வாடிக்கையாளர்களை கண்காணிக்கும் சிறீலங்கா அரசு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com