Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கிற்காகன தொடரூந்து பாதை அமைப்பிற்கென பொதுமக்களிடம் இருந்த திரட்டப்பட்ட கோடிக்கணக்கான நிதியினை முன்னாள் போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெருமா கையாடல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொது மக்களிடம் இருந்து திரட்டப்பட்ட பணம் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்படவில்லை என்றும் அந்த நிதி தொடர்பான எந்த விபரங்களும் அமைச்சு அலுவலகத்தில் காணப்படவில்லை என்றும் சுட்டிக்hட்டப்பட்டுள்ளது.

டலஸ் அழகப்பெருமா அந்த நிதியினை தனது தனிப்பட்ட கணக்கில் வைப்பிலிட்டுள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை போக்குவரத்து அமைச்சின் முக்கிய ஆவணங்கள் அடங்கிய கோப்புகளை டலஸ் அழகப்பெரமா கொண்டு சென்றுள்ளதாகவும் இதனால் அமைச்சின் நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் நெருக்கடி நிலை தோன்றியுள்ளதாகவும் அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

0 Responses to டலஸ் அழகப்பெருமா கோடிக்கணக்கான நிதியினை கையாடல் செய்துள்ளார்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com