Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாழ் குடா நாட்டில் நேற்று முதல் பரவலாக படையினர் சேதனை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

வல்லை வெளி மற்றும் யாழ் காங்கேசன் துறை வீதி நாச்சிமார் கோவில் பகுதியில் இவ்வாறான சோதனைகள் அதிகம் காணப்பட்டதை அவதானிக்க முடிந்ததது.

வல்லையில் பேரூந்துகளில் இருந்து இறக்கி நடத்தி விடப்பட்ட மக்கள் கடும் விசாரணைகள் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அடையாள அட்டைகள் பரிசீலிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ள பொதுமக்கள், தற்போது சமாதானம் நிலவுகின்றது என்னும் சிறீலற்கா அரசின் பேச்சை நம்பி அடையாள அட்டைகள் எடுத்து வராது பயணம் செய்த பலர் படையினரால் மறித்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்த பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

0 Responses to யாழ் குடா நாட்டில் படையினரால் மீண்டும் வீதிச்சோதனைகள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com