Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழீழ வரலாற்றில் என்றுமே மறக்க முடியாத துன்பங்கள் தமிழர் மீது திணிக்கப்பட்ட துயரங்கள் நிறைந்த மாதம் மே மாதமாகும். இலங்கை அரசாங்கம் கடந்த ஆண்டு (2009) மே மாதம் அன்று, கிளிநொச்சியில் தொடங்கி, முள்ளிவாய்க்கால் வரை தமிழீழ மக்கள் மீது வரலாறு காணாத கொடிய இனப் படுகொலையை வெறிகொண்ட இலங்கை அரசு திரைமறைவில் கட்டவிழ்த்திருந்தது. சர்வதேசம் பாரமுகம் காட்ட, இனவெறி கொண்ட சிங்கள அரசு பல்லாயிரக்கணக்கான தமிழ்ர்களை வகை தொகையின்றி கொன்று குவித்திருந்தது.

ஐம்பது ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்களை வைகை தொகையின்றி கொன்றழித்தது மட்டுமல்லாது, எஞ்சியவர்களை கொடிய வதைமுகாம்களில் வைத்து சித்திரவதை செய்யப்பட்டுவருகின்றனர் .

கனடா தமிழ் இளையோர் அமைப்புடன், கனடா தமிழ்ச் சமூகத்துடன் இணைந்து இக் கொடிய படுகொலைகளை நினைவு கூரும் முகமாகவும், இப்படுகொலைகளை உலகுக்கு வெளிக்காட்டுமுகமாகவும் மே மாதத்தைவலி சுமந்த மாதம்ஆக பிரகடணப்படுத்தி நினைவெழுச்சி நிகழ்வுகள் நடாத்தப்படவுள்ளன.

இதன்படி ரொறொண்டோ வில் உள்ள அமெரிக்க துனைத்தூதுவரலயம் முன்பாக கூடிய மக்கள் தமது கவனயீர்ப்பு நிகழ்வை தமது வாயில் கறுப்பு துணியால் கட்டியவாறு பங்குகொண்டனர் இவ் கவனயீர்ப்பு நிகழ்வு நாள்தோறும் மே முதல் மே தொடந்து நடைபெறவுள்ளது எனபது குறிப்படத்தக்கது.

TYO Media – Canada

0 Responses to “வலி சுமந்த மாதம்” கவனயீர்ப்பு நிகழ்வின் முதலாம் நாள் (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com