Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவுடனான பேட்டியின் போது கூறப்பட்ட விடயங்களை பதிவு செய்த குறிப்பேட்டை சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் பெற்றிகா ஜெனஸ் இன்று நீதிமன்றத்தில் கையளித்தார்.

இறுதிக்கட்ட போரின் போது வெள்ளைகொடியேந்தி சரணடைய வந்த புலி உறுப்பினர்களை கொலைசெய்யுமாறு பாதுகாப்புச் செயலாளர் தனக்கு உத்தரவிட்டதாக இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தனது பிரத்தியேக பேட்டியில் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான விசாரணையை மேற்கொள்வதற்காக பேட்டியின்போது பயன்படுத்திய குறிப்பேட்டினை மன்றில் சமர்ப்பிக்குமாறு நீதவான் சம்பா ஜானகி பெரேரா உத்தரவிட்டிருந்தார். அதன்பிரகாரம் 89 பக்க இந்த குறிப்பேட்டை பெற்றிகா ஜெனஸ் நீதிமன்றத்தில் கையளித்தார்.

இந்த வழக்கு தொடர்பான் விசாரணை வரும் ஜூலை மாதம் 12 ம் திகதி மீண்டும் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

0 Responses to வெள்ளைக்கொடி விவகாரம் : ஊடகவியலாளரின் குறிப்பேடு நீதிமன்றில் சமர்ப்பிப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com