Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐக்கிய நாடுகளின் செயலாளர் பான் கீ மூனினால், அமைக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவிற்கு தாம் ஒத்துழைப்பு வழங்க தயார் என தமிழீழ விடுதலைப்புலிகள் அறிவித்துள்ளனர்.

இந்தநிலையில் குறித்த நிபுணர் குழு, சாட்சியமளிக்க வருபவர்களை பாதுகாக்கவேண்டும் என தமிழீழ விடுதலைப்புலிகள் வலியுறுத்தியுள்ளனர்.

அமெரிக்காவை தளமாகக்கொண்டவரும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினருமான விஸ்வநாதன் ருத்திரகுமாரன் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

நிபுணர் குழுவின் விசாரணைகள் தெளிவான முறையில் நடத்தப்படவேண்டும் என்பதுடன், சர்வதேச மட்டத்தின் தரத்திற்கேற்ப அது மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

இந்தநிலையில், தாம் ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழுவிற்கு முழு ஒத்துழைப்பையும் வழங்குவதாக ருத்திரகுமாரன் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு, சுதந்திரமாக விசாரணைகளை மேற்கொள்ளும்போது, வன்னியில் கடந்த வருடம் இடம்பெற்ற மனிதப்படுகொலைகள் குறித்த உண்மைகளை கண்டறிய முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை நிபுணர் குழு தமது விசாரணைகளை நான்கு மாதங்களுக்குள் வரையறுக்காமல், அதன் வரையறையை நீடித்து சர்வதேச சட்டங்களுக்கு அமைய விசாரணைகளை நடத்தவேண்டும் என்றும் ருத்திரகுமாரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

0 Responses to ஐ.நா.வின் நிபுணர் குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்க தயார்: தமிழீழ விடுதலைப்புலிகள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com