மரணமெல்லாம் தூசி பாரு,
ரத்தம் சொட்டிய மண்ணெடுத்து
அவர்கள் உயிர்வாசம் நுகர்ந்து பாரு;
கரும்புலிகள் உதிரம் பூத்து
கடல்கூட அழுது சிவந்தது பாரு -
உயிரும் வருடமும் பலிகொடுத்தும்
ஈழம் மட்டும் – இலங்கையாச்சி பாரு;
மில்லர் போல பலபேரின்
இலட்சியக் கனவு சாமாதியில் பாரு -
கமலுக்காக ஒரு பெண்ணின்
கட்டாத தாலி விதவையாச்சி பாரு;
அங்கையர்கன்னி வரலாறெல்லாம்
கடலெழுதிக் கொண்டது பாரு -
பெண்கள் செய்த சாகசங்கள் – கூட
வெற்றிகொண்ட மரணமாச்சி பாரு;
காந்தரூபன், கொலின்ஸ், டாம்போவின் இறப்பெல்லாம்
விடுதலையின் வேட்கை பாரு -
உயிர்கள்; பல கொடுத்து – காத்த ஈழம்
முள்ளிவாய்க்காலோடு மௌனமாச்சி பாரு;
ஒன்றா இரண்டா உயிர்கொடுமை
எல்லாம் -
ஈழமண்ணின் வீரம் பாரு -
விட்ட உயிர்கள் முளைத்தொரு நாள்
எங்கள் தேசம் வெல்லும்; உறுதி பாரு;
கரும்புலிகள் கதை படித்தால்
செத்த -
பிணம் கூட வீரங் கொள்ளும் பாரு;
கரு விதைத்த கரும்புலிகளின்
சமாதி கூட பாடம் புகட்டுது பாரு!!
வித்யாசாகர்.



0 Responses to கேட்ட கதையும்; கேட்காத பாடமும்: கரும்புலிகள்