Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கை அரசின் தமிழினப் படுகொலை நடவடிக்கைகளுக்கு எதிராக .நா.மனித உரிமை சபையில் வழக்குத்தாக்கல் செய்கின்றமைக்குத் தேவையான நடவடிக்கைகளை மலேசியாவின் பினாங்கு மாநிலத் துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி முன்னெடுத்து வருகின்றார். இவர் இந்த நோக்கத்துக்காகச் சர்வதேச குழுவொன்றை அமைக்கவுள்ளார். இச்சர்வதேச குழுவில் மனிதாபிமான அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரசியல்வாதிகள், மனித உரிமை ஆர்வலர்கள் போன்றோர் உள்வாங்கப்படவுள்ளனர்.

இக் குழு இன்னும் சில மாதங்களில் செயற்படத் தொடங்கவுள்ளது. இலங்கை அர சின் இனப்படுகொலை நடவடிக்கைகளுக்கான ஆதாரங்களைத் திரட்டும் பணியில் இது முதலில் ஈடுபடும். திரட்டப்படும் ஆதாரங்களை வைத்து .நா. மனித உரிமைகள் சபையில் வழக்குத் தாக்கல் செய்யப்படுவதுடன் இந்த ஆதாரங்கள் .நா. செயலாளர் நாயகத்திற்கு சமர்ப்பிக்கப்படும் என்று பேராசிரியர் இராமசாமி தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழர்களை வகைதொகையின்றி படுகொலை செய்து குவித்த இலங்கை, இந்தியத் தலைவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு கட்டாயம் தண்டிக்கப்பட வேண் டும் என்றும் எங்கெல்லாம் மனித உரிமை கள் மீறப்படுகின்றதோ அங்கெங்கும் எல்லாம் பாதிக்கப்பட்ட தரப்பினர்களுக்காக இச் சர்வதேச குழு தவறாது குரல் கொடுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to தமிழின படுகொலைகள்: சர்வதேச குழு அமைத்து ஐ.நா.வில் வழக்கு தாக்கல் செய்கிறார் மலேசிய பினாங்கு மாநில துணை முதல்வர்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com