Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

புலம்பெயர் தமிழர்களின் மென்வழிப்போராட்டங்களின் தொடராக, 11.10.2010 அன்று சேர்மனிவாழ் இளையோர்களான செல்வன்.சஞ்சீவன் சிவசுப்பிரமணியம், திரு.சின்னத்துரை அருணதாசன், திரு.தேவன் குகதாசன் ஆகியோரால் அனைத்துலக நாடுகளிடம் முறை (நீதி) கேட்டும், தமிழரின் தன்னாட்சியுரிமையை ஏற்றுக்கொள்ள வேண்டியும் புறூசலில் இருந்து தொடங்கப்பட்ட மிதிவண்டிப்பயணம் இன்று (17.10.10) ஏழாவது நாளைக் கடந்துள்ளது.

OSNABRUCK நகரத்தில் நகரப்பிரதிநிதி ஒருவரையும், ;> SPD கட்சியின் முதன்மை பிரதிநிதி ஒருவரையும், சேர்மனியின் மூன்றாவது நிலையிலிருக்கும் பத்திரிகையின் நிருபர் ஒருவரையும் பயணக்குழுவினர் சந்தித்ததோடு, தனித்தனியே கோரிக்கைகள் அடங்கிய மனுவைக் கையளித்ததுடன், எமது நிலைப்பாடு தொடர்பாகவும் விளக்கமளித்திருந்தனர்;. அத்தோடு எம் உறவுகளையும் சந்தித்திருந்தனர்;.இன்று OSNABRUCK என்னும் இடத்திலிருந்து தொடங்கப்பட்ட மிதிவண்டிப் பயணம் 5 பாகை குளிர்காலநிலையில் மலைப்பாதை வழியாக 100 கிலோமீற்றர்களை ஆறுமணித்தியாலத்தில் கடந்து STADT HAGEN நகரத்தை வந்தடைந்துள்ளது.

இவர்களின் பயணம் நாளை HANNOVER நோக்கிப் பயணிக்கவுள்ளது. மேலும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (22.10.2010) அன்று நடைபெறவுள்ள கவனயீர்ப்பு நிகழ்வில் புலம்பெயர்வாழ் தமிழீழ உறவுகள் அனைவரும் பங்குகொண்டு அனைத்துலக நாடுகளிடம் முறை (நீதி) கேட்க அணிதிரள்வதோடு, தொடர்போராட்டங்களை முன்னெடுக்க இளையோரை முன்வருமாறு அழைப்புவிடுத்துள்ளனர் பயணக்குழுவினர்.






மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to ஏழாவது நாளைக் கடக்கும் மிதிவண்டிப்பயணம் (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com