யாழ்ப்பாணம் பருத்தித்துறை மற்றும் மாதகல் கடற்பரப்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 136 இந்திய மீனவர்கள் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.கைதுசெய்யப்பட்டு அடுத்தடுத்த நாட்களில் யாழ் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்களே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இலங்கையில் சிறை வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் இன்று விடுவிக்கப்படுவர் என முன்னர் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
வடபகுதி மீனவர்கள் அதிருப்தி
தங்களுடைய கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து ஒரு கோடியே 15 இலட்சம் ரூபா பெறுமதியான கடல் வளங்களை அழித்த இந்திய மீனவர்களை எந்தவொரு நியதியும் இல்லாமல் விடுதலை செய்தமை குறித்து தாம் அதிருப்தி அடைவதாக வட மாகாண கடற்றொழிலாளர் சமாசத் தலைவர் எஸ்.தவரட்ணம் தெரிவித்தார்.
இந்நிலையில் அவர்கள் எவ்வித நியாயமுமற்ற நிலையில் விடுதலை செய்யப்பட்டமையானது வட மாகாண கடற்றொழிலாளர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது' எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



0 Responses to தமிழக மீனவர்கள் 136 பேரும் இன்று விடுதலை!