Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாம் தமிழர் கட்சியின் மாநிலத்தலைவர் சீமான் இன்று புதுவை கோர்ட்டில் ஆஜரானார்.

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக புதுவை சட்டக்கல்லூரி மாணவர்கள் கடந்த 2009-ம் ஆண்டு தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்கள்.

அப்போது சீமான் கலந்து கொண்டு உண்ணாவிரதத்தை வாழ்த்தி பேசினார். அப்போது அவர் விடு தலைப்புலிகளை ஆதரித்தும், இந்திய இறையான்மைக்கு எதிராகவும் பேசியதாக ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

மேலும் இது தொடர்பாக டைரக்டர் சீமான் கைது செய்யப்பட்டு புதுவை காலாப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். 3 மாதம் சிறையில் இருந்த டைரக்டர் சீமான் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்த வழக்கு புதுவை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதைத் தொடர்ந்து இந்த வழக்கில் டைரக்டர் சீமான் ஆஜரானார்.

நீதிபதி தண்டபாணி இந்த வழக்கை அடுத்த மாதம் 17-ந்தேதிக்கு ஒத்தி வைத்தார்.

0 Responses to புதுவை கோர்ட்டில் செந்தமிழன் சீமான் ஆஜரானார்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com